Monday, June 10, 2013

வணக்கம் நண்பர்களே,

கொடுமணல் - ஈரோடு மாவட்டம் காங்கேயம் அருகில் உள்ளது.  மூதாதையர் வாழ்ந்த பயன் பயன்படுத்திய இடத்தையும் தடயங்களையும்  தினமலர் ஹிந்து நாளிதழ்கள் கடந்தவாரங்களில் வெளியிட்டன. இரண்டு வாரங்களாக திட்டமிட்ட பயணம் நேற்றுதான் சாத்தியமானது. நேற்றைய பயணம்  மிகவும் ஆச்சர்யமாகவும், கொஞ்சம் வெட்கமாகவும் இருந்தது. இவ்வளவு அருகிலே திருப்பூரில் இருந்துகொண்டு இருந்தும் இத்தனை நாள் இதைப் பற்றித் தெரியாமல் இருந்திருக்கிரோமே என்று.    நாங்கள் சென்றபொழுது,  இரண்டு வாரங்களுக்கு முன்னால் வருகைபுரிந்திருந்தால் ஆய்வுப் பணிகளையும், ஆய்வில் கிடைத்த பொருட்களையும் பார்த்திருக்கலாம் என்று அந்தப் பகுதியில் வசிக்கும் ஒருவர் கூறினார். மேலும் இது குறித்த தகவல்களைப் பெற சோமு என்பவரை பாருங்கள் என்று கூறினார். புறப்படுவதற்கான நேரம் வந்துவிட்டது அவரைப்பார்க்கலாமா வேண்டாமா என்று 
யோசித்தது அவரைப்பார்த்து உரையாடியபின் தவறு என்று உணர்ந்தோம்.

 சோமு அவர்கள் இருக்கும் இடத்திற்குச் 
சென்றவுடன் மிகவும் எளிமையான கொங்குமண்டல விவசாயி ஒருவரை காண்பித்து இவர்தான் என்றார்கள். வந்த காரணத்தை சுருக்கமாகக் கூறினோம். நீங்கள் இடத்தைப் பார்வையிடச் செல்லும்போது என்னை அழைத்திருந்தால் நானும் உங்களுடன் வந்து எல்லவற்றையும் விளக்கமாகக் கூரியிருப்பேனே என்றார். அவருடைய நிலத்தில்தான் ஆராய்ச்சிப்பணிகள் நடைபெற்றதாகக் கூறினார்.
அறிமுகப்படலத்தில் அவர் பெயர் சோமு என்கிற இராமச்சந்திரன்  அந்தப் பகுதியின் தற்போதைய மணியகாரர் (VAO) என்றும் திருப்பூரில் computerised embroidery தொழில் செய்து கொண்டு இருக்கிறார் Msc மற்றும் LLB பட்டதாரி என்பதை தெரியப்படுத்தினார். மனதுக்குள் நிமிர்ந்து உட்கார்ந்தோம். இந்த இடத்தில தேங்காய் களமும் ஆயில் மில்லும் உள்ளதாக கூறினார். இவ்வளவு எளிமையா என்று வியப்பு (வெளியில் காட்டிக்கொள்ளவில்லை). பேசப் பேச அவருக்கு இந்த அகழ்வாராய்ச்சி குறித்த 
ஆழமான அறிவும் அவருடைய ஈடுபாடும் முயற்சியும்  அவர்பால் மிகுந்த மரியாதையை எங்களுக்கு
ஏற்ப்படுத்தியது. புகைப்படத் தொகுப்புகள், பத்திரிகையில் வந்த செய்திகள் என்று 
ஒரு மணி நேரம் எங்களுக்காக பொறுமையாக நிறைய விளக்கங்கள் கொடுத்தார். இடையே சுவையான தேநீரும் கிடைத்தது. (அந்தக் கிராமத்தில் ஒரு டிக்கடை கூட இல்லை)

இரண்டாயிரத்து  ஐநூறு ஆண்டுகளுக்கு முன்பு நமது மூதாதயர்கள் ரோமானியர்களுடன் வணிகம் செய்ததற்கான சான்றுகள் தொல்பொருள் ஆராய்ச்சியில் கிடைத்துள்ளன.  உலகம் முழுவதிளிமிருந்து ஆராய்ச்சியாளர்கள், பாண்டிச்சேரி பல்கலைக்கழக மாணவர்கள் வருகை தந்து அடிப்படை வசதிகள் இல்லாத இந்தச் சிறிய கிராமத்தில் தங்கி ஆய்வுகள் செய்கிறார்கள் என்று கூறினார். மாணவிகள் பெண்கள் தங்கி ஆராய்ச்சிகள் செய்ய போதுமான வசதிகள் இல்லை என்று கூறினார். தற்போதைய 
மாவட்ட ஆட்சியர் இங்கு வந்தபோது இதற்கான வசதிகளுடன் ஒரு காட்சிக்கூடம் அமைத்துத் தருவதாக உருதியளித்திருப்பதாகக் கூறினார். சங்ககாலத் தமிழர்களுடைய தொழில் மதிநுட்பத்தையும் 
கடல் கடந்து வாணிபத்தில் ஈடுபட்டதையும் மிகவும் சிலாகித்துப் பேசிகொண்டிருந்தோம். அப்போதே 
பருத்தி நூல் நெசவு செய்ததர்க்கான சான்றுகள் பற்றிய பேச்சின் போது, இன்றைய திருப்பூரின் வளர்ச்சியை மனம் தொடர்பு படுத்திப் பார்த்தது.
 
இடையே அவருக்கு  வறட்சி நிவாரணப் பணிக்கான வேலைகள் குறிக்கிட்டதால் அவரிடம் விடைபெற்றோம். கடந்த இருபது வருடங்களாக இந்த ஆராய்ச்சிப் பணிகளுக்கு தமது நேரத்தையும் பொருளையும் அளித்துக்கொண்டிருக்கும் இவரை நமது Tirupur Nature Society துவக்க விழாவிற்கு அழைத்து மரியாதை செய்ய வேண்டும். மேலும் விபரங்களுக்கு நக்கீரன் தளத்தில் எடுக்கப்பட்ட விபரங்களைக் கொடுத்துள்ளேன்.

நன்றி,
விசு.

கொசுறு: இருபது ஆண்டுகளுக்கு முன் எழுதிய தேர்வுக்கு கடந்த ஆண்டு அவருக்கு VAO பதவி கிடைத்துள்ளது. கொடுமணல் ஊரட்சித்தலைவராக அவருடைய தம்பியை போட்டியின்றி அந்தஊர் மக்கள் தேர்வு செய்து அவருடைய குடும்பத்திர்க்கு  மரியாதை செய்துள்ளனர். 

Wednesday, June 5, 2013

இன்று உலக சுற்றுச் சூழல் தினம்.

இன்று எங்களது கம்பெனிக்கு எதிரில் உள்ள பொது குடிநீர்க்குலாயிளிருந்து கேட் வால்வ் பழுதடைந்து சாலையில் தண்ணீர் விரயமாகிக்கொண்டிருந்த்தது.  எங்கள் செலவில் அதனைச் சரிசெய்து கொடுத்தோம்.

Tuesday, December 25, 2012


பயனுள்ள கூட்டங்களை நடத்த வேண்டும்

எப்படி பயனுள்ள கூட்டங்களை நடத்த வேண்டும் என்று சில கருத்துக்களை தொகுத்து வழங்கமுயற்சி செய்கிறேன்.


கூட்டங்கள் தனிப்பட்ட முயற்சிகளை ஒருங்கிணைப்பதற்கு அவசியமாக இருக்கிறது.
திட்டங்கள் நிறைவேற கூட்டுப்பணியாற்றுவதற்கான யோசனைகளையும்  ஆதரவையும் பெறஅவசியமாக இருக்கிறது.  
பிரச்சினைகளைத்  தீர்த்து ஒட்டுமொத்தமாக, மற்றும் ஒருமித்த  தீர்மானங்களை எடுக்கப் பயன் படுகிறது.
அடிப்படையில் ஒருநபரால் செய்யமுடியாததை நிறைவேற்ற.ஏற்பாடு செய்யப்படுவது. 
எவ்வாறெனினும், அனைத்துக்  கூட்டங்களும் உண்மையில் அவசியமாக இருக்கிறது.

பல கூட்டங்கள் நேரிடையாக  நடைபெற வேண்டிய அவசியம் இல்லை, 
முதலில் நாம் சந்திக்க வேண்டுமா என்பதை முடிவு செய்ய வேண்டும். 
கூட்டங்களைக் கூட்டாமல் மாற்று வழியில் திட்டங்களை செயல்படுத்த முடியுமா என்று முயற்சிக்க வேண்டும்.
உதாரணமாகத் தொலைபேசி மற்றும் மின்னஞ்சல் மூலமாகச் செயல்படுத்த முயற்சிக்கவேண்டும்.
கூட்டம் ஏற்பாடு செய்வதற்கு முன்பாக பொறுப்பாளர் குறிக்கோள்களை  தெளிவாக வரையறுக்க வேண்டும்.

நீங்கள் உங்கள் குறிக்கோள்கள் ஊடாக பின்வரும் நான்கு கேள்விகளை உங்களுக்குள் கேட்கவேண்டும்.

1. நான் ஏன் இந்தக் கூட்டத்திற்கு திட்டமிட வேண்டும்  அல்லது இந்த கூட்டத்திற்கு கலந்து கொள்ள வேண்டும் ?
2. நான் சாதிக்க அல்லது பெற வேண்டிய தேவை என்ன? 
3. என்ன தகவல் பரிமாற்றம் அல்லது முடிவுகள் செய்யப்படவேண்டும்?
4. குறிக்கோள்களை நிறைவேற்ற அல்லது ஆதரவு பெற  நான் சந்திக்க வேண்டியவர்கள் அல்லது வரவேண்டியவர்கள் யார் யார்?

நீங்கள் உங்கள் குறிக்கோள்களைத் தெளிவுபடுத்திய பின் அவற்றை அடையச்  சிறந்த வழிகளைத் தீர்மானிக்க வேண்டும்.
கூட்டத்தில் கலந்துகொள்ளும் அனைவருடைய நேரம் மற்றும் ஆற்றலை சிறந்த முறையில் எப்படி  பயன்படுத்தலாம் 
என்று தீர்மானிக்கப் பின்வரும் காரணங்கள் எதாவது ஒன்று கண்டிப்பாக இருக்கவேண்டும்.

1. தகவல்களை குழுவினரிடம் தெரிவிப்பதற்கு.
2. தகவல்களை குழுவினரிடம் பெறுவதற்கு.
3. கேள்விகளுக்கு பதில்கள் அளிப்பதற்கு.
4. குழுவின் முடிவில் பங்குபெறச் செய்வதற்கு
5. கருத்துக்களை முன்னெடுத்துச் செல்வதற்கு 
6. பிரச்சினைகளைத்  தீர்ப்பதற்கு.
7. வலையமைப்பு செய்வதற்கு.
8. ஒரு யோசனை, தயாரிப்பு, அல்லது சேவையைப்  பரிமார, விற்க.
9. ஆதரவை வழங்க, பெற.

இதில் எதாவது ஒரு நோக்கதை முன்னெடுக்க வேண்டி பயனுள்ள கூட்டத்தைக் கூட்டலாம்.கூடுகைக்கு எப்படி ஏற்ப்பாடு செய்வது  

நல்ல கூட்டங்கள் எதிர்பாரதவிதமாக நடப்பதில்லை அவை நல்ல திட்டமிடலின் விளைவே. முன்னதாக நேரம் செலவழித்து ஏற்பாடு செய்யும் கூட்டங்கள், செலவிடப்படும் நேரங்களை திறமையாகப் பயன்படுத்துவதன் மூலம் இலக்குகளை அடைய பின்தொடர்ச்சிக் கூடுகைகளின்   தேவையைத்  தவிர்த்துப் பல நன்மைகளை விளைவிக்கும்.  ஒரு கூட்டம் நடத்த முடிவு செய்யும் போது கூட்டத்தின் நோக்கம் என்ன யார் யார் கூட்டத்திற்கு வேண்டும் என்பதை முடிவு செய்ய வேண்டும்.  

கூட்டங்களுக்குத் திட்டமிடும் பொழுது பின்பற்றவேண்டிய முக்கியக் கூறுகள் 

நோக்கம்:

திட்ட வரையறை குறிக்கோளின் அடிப்படையில்  செய்யப்படவேண்டும்.
தன்னார்வத் தலைவர்களின் நேரத்திர்க்கிணங்க நேரம் ஒதுக்க வேண்டும் 


பங்களிப்பாளர்கள்:

குறிக்கோளை  வெற்றிகரமாக செய்து முடிக்க  யார் யார் இந்த கூட்டத்தில் கலந்து கொள்ள வேண்டும் என்பதை முடிவு செய்யவேண்டும்.

கட்டமைப்பு:

குறிக்கோளை  வெற்றிகரமாக செய்து முடிக்க தொழில்நுட்ப முறையில் கூட்டம் நடைபெற ஏற்பாடு 
செய்யவேண்டும். உதாரணம், துறைசார்ந்த பேச்சாளர்களை விருந்தினர்களாக பேச அழைப்பது, ஒளிப்படக் காட்சி நிகழ்த்துவது, தன்னிச்சையாக ஆக்கப்பூர்வமான யோசனைகளை ஒரு தீவிர குழு விவாதம்  ( "குழு அமர்வு") ஏற்பாடு செய்து குறிக்கோளை அடையும் தாக்கத்தைப் பங்களிப்பாளர்களுக்கு ஏற்படுத்தவேண்டும். 

இடம் மற்றும் நேரம்: 

பங்கேற்பாளர் தேவைக்கு, நோக்கத்திற்கு மற்றும் திட்டக்கட்டமைப்புக்கு ஏற்றபடி புறம் மற்றும் அகச்சூழல் சிறப்பாக இருக்கும் இடத்தைத் தேர்ந்தெடுக்கவேண்டும். மேலும் இடத்தின் அளவு பொருத்தமாகவும், எளிதில் அனுகக்கூடியதாகவும், வசதியானதாகவும், போதுமான வாகன நிறுத்துமிடம், ஒலி, ஒளி  உபகரணங்கள் உள்ளிட்ட வசதிகள் இருக்கவேண்டும்..  கூட்டம் கூடும் 
நேரம் பங்களிப்பாளர்கள் வருகைக்கு உகந்ததாக இருக்கவேண்டும். கூட்டம் நீளும் நேரம் வரையறைக்கு உட்பட்டதாகவிருக்கவேண்டும்.

நிகழ்ச்சி நிரல்:

நிகழ்ச்சி நிரலை முன்னதாக தயார் செய்து கூட்ட நாளுக்கு குறைந்தபட்சம் மூன்று நாட்களுக்கு முன்னதாக அனைவருக்கும் விநியோகிக்கவேண்டும். சந்திப்பு வெற்றிபெற நிகழ்ச்சி நிரலில் . நோக்கமும், பணிகளும் தெளிவுற அறியும்படி குறிப்பிடவேண்டும். அது பங்கேற்ப்பாளர்கள் திட்டமிடவும், பயனுள்ள பங்களிப்பை தயார் செய்யவும் உதவும். மேலும் பங்கேற்பாளர்களின் கவனமும் கூட்டத்தின் நோக்கமும் திசை மாறாமலிருக்கும். பல பாணிகளில் நிகழ்ச்சிநிரல் அமைக்கலாம் ஆனால் அடிப்படையில் அவை பின்வரும் கூறுகளைக் கொண்டிருக்கவேண்டும். 
தலைப்பு, இடம், தேதி, நேரம், கலந்துரையாடல் விபரம், பொறுப்பாளர்கள் பெயர், பங்களிப்பாளர்கள் பெயர்ப் பட்டியல். பல்வேறு தலைப்புகள் இருந்தால் ஒவ்வொரு தலைப்பிற்கான நேரம் போன்றவை  இடம் பெறவேண்டும். 


பொறுப்புகள்: 

கூட்டத்திற்கான நோக்கத்தில் மட்டும் அனைவருக்கும் ஒருமித்த புரிதல் இருந்தாலும் ஒவ்வொருவரின் தனிப்பட்ட பணிகள் மொத்த நிரலுக்கும் பொருந்தும் வண்ணம் இருக்கவேண்டும். குறிக்கோள்களை 
அடைவதற்கான தன்னிச்சையாக ஆக்கப்பூர்வமான யோசனைகளை கூரும்வண்ணம் இருக்கவேண்டும். தனிநபர் தேவைகளின் பணிசார்ந்து இருக்கக்கூடாது.  கொள்கை முடிவுகள் எடுக்கும் 
கூட்டங்களிள் அது சார்ந்த விளக்கங்கள் சுருக்கமாக எழுதப்பட்ட தாள்களில் விநியோகிக்கப்பட்டால் 
பங்களிப்பாளர்கள் தங்களது கடமையை தெளிவாக உணர்ந்து செயல்பட எதுவாகவிருக்கும். 


உறுதிப்படுத்தல்: 

சந்திப்பு புதிய நாளாக இருக்கும் பட்சத்தில் ஒருவாரத்திற்கு முன்னதாக ஒவ்வொருவரையும் தனித்தனியாகத் தொடர்புகொண்டு தெரியப்படுத்தவேண்டும்.  திட்டமிட்டதொடர் சந்திப்புகளுக்கு  ஒரு இடம் மற்றும் சந்திப்பு நேரம் தேர்வு செய்தபின் அதை ஒவ்வொருவர் விருப்பத்திற்கு மாற்ற முயற்சி செய்யக்கூடாது. ஒருங்கிணைப்பாளர் அல்லது தலைவர் கூடுகைக்கானவற்றை திட்டமிட்டு செயலாற்றலாம் ஆனால் பணிச் சுமைகளை அவர் ஒருவரே சுமக்கக்கூடாது.  தலைவருடைய வேலை திட்டமிடல் மட்டுமே அவரே அந்த வேலைகளைச் செய்யக்கூடாது. அனைத்துப் பணிகளும் பிரித்து 
ஒதுக்கப்பட்டு பொறுப்புகளும் அதிகாரங்களும் உரியவர்களுக்கு வழங்கப்படவேண்டும். தலைவருக்கு 
நிகழ்ச்சி நிரல் குறித்த அணைத்து விபரங்களும் அதன் பின்னணியும் தெரிந்திருக்கவேண்டும். 






Thursday, September 6, 2012

பறவை நோக்கல் 

பறவை நோக்கல் என்பதன் அடிப்படை நோக்கம் அதன் அழகைப் பார்த்து வியப்பது, அதனைப் படம்பிடிப்பது, எந்த வகை மற்றும் 
என்ன பெயர் என்று தெரிந்துகொள்வது என்று வெறுமனே பொழுது போக்கு என்றில்லாமல் அவற்றின் வாழ்வு முறை, உணவுப் 
பழக்கம், இனப்பெருக்கம், கூடுகட்டும் முறை, வலசை வருதல் போன்றவற்றையும் உற்று நோக்கி அவைகளையும் நாம் பதிவு 
செய்யவேண்டும். பல்லுயிரியச் சுழற்சியில் பறவைகளின் பங்களிப்பைப் புரிந்து கொண்டு அதன் முக்கியத்துவத்தை எல்லோருக்கும் தெரியப்படுத்தவேண்டும். சுற்றுச் சூழல் வளமாக இருக்கின்றதா மாசுபட்டிருகின்றதா என்பதை தெரிந்துகொள்ள பறவைகள் பற்றிய இந்தப் பதிவகள் மூலமாக நாம் அறியலாம். எனவே நண்பர்களே நாம் பறவை நோக்கலில் இன்னும் அறிமுகக் கட்டத்திலேயே இருக்காமல் அடுத்தகட்டத்திற்குச் செல்வது பற்றி ஆலோசித்து நடவடிக்கையில் இறங்கலாம்

Friday, August 31, 2012

எது சனநாயகப் பண்பாடு என்பது குறித்து எனக்குச் சில கேள்விகள் இருக்கிறது. 
எனது அனுபவம் மற்றும் நான் நான் படித்த கட்டுரைகள் எனக்குள் ஏற்ப்படுத்திய பாதிப்பு இது.
ஒரு நாட்டு மக்கள் தங்கள் கருத்துக்களைத் தேர்தல் மூலமாக பதிவு செய்து தாங்கள் சார்ந்த அல்லது சார்ந்திரிக்கிற அமைப்பின் மூலமாக தங்கள் சார்பாளர்களைத் தேர்ந்தெடுத்து, தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் தனிக்கட்சியாகவோ கூட்டனியமைத்தோ ஆட்சியமைப்பது 
என்பதுதான் மக்களாட்சி அல்லது சனநாயகம். இவ்வாறான கருத்துப் பொது நிலையை 
விரிவுபடுத்தி அதன் எல்லைகளை பரவலாக்கிக் கொள்ளும் புத்திசாலித்தனமே சனநாயகப் 
பண்பாடெனில் இந்தக் கருத்துத் தினிப்பிர்க்கு மக்கள் எப்படி ஆட்படுகிறார்கள்.  மக்களின் 
மூளை  இந்தச் சனநாயகக் கட்டமைப்புக்காகக் எப்படி கட்டுப்படுத்தி வைக்கப்படுகிறது. 
இது ஒரு குழப்பமான சமூகச் சூழலாகப் படுகிறது. 

இப்படியான சமூகச் சூழலில், வீட்டை விட்டு, வாழ்வாதாரத்திற்கான பொருள் தேடலில் இருந்து 
விடுபட்டு வெளியே வந்து நான்கு நண்பர்களிடம் கருத்துப் பரிமாற்றம் செய்வதற்குள் நமக்கு விரக்தியும் சோர்வும் அண்டிவிடுகிறது.  ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்தால் தான் மீண்டும் அந்த நட்பைத் தொடர முடிகிறது. விட்டுக் கொடுத்தல் என்பது நல்ல அணுகுமுறைதான் ஆனால் தவறான முடிவுகளுக்காக விட்டுக் கொடுப்பது என்பது வேதனையே. இந்த வேதனையில் இருந்து விடுபட இயலாமை உணர்வுக்கு ஆட்படுகிறோம். அப்பொழுது நமது இயலாமை நம்மை திரும்பவும் நமது பாதுகாப்பான இடத்திற்கே இட்டுச் செல்கிறது. அப்பொழுது நமது இருப்பு என்பது இந்தச் சமூகத்தில் நாம் விழிப்புணர்வு பெற்றாலும் நாகரீகமானவர்களாக இருந்தாலும்  வெறும் பார்வையாளனாக இயலாதவனாகத் தானே இருக்கிறோம்
தற்காலத்தில் நமது உணவருந்தும் பழக்கம் வெகுவாக மாறிவிட்டது. குடும்பமாக உட்கார்ந்து அம்மா அன்புடன் சமைத்து 
அக்கறையுடன் பரிமாறிய நமது பாரம்பரியப் பழக்கம் வெகுவாகக் குறைந்துவிட்டது. அன்புடன் பரிமாறப்படும் உணவு ஊட்டச் 
சத்துள்ள உணவு சாப்பிட்டால் எந்த அளவு நமக்கு  நன்மை பயக்குமோ அதை விடச் சிறந்தது என சமீபத்திய ஆய்வுகள் நமக்குத் 
தெரிவிக்கின்றன. குறைந்த பட்சம் இரவு உணவை குடும்பத்துடன் அன்புடன் பரிமாறப் பட்டு சாப்பிடும் குழந்தைகள் மற்ற 
குழந்தைகளை விட நன்றாகப் படிக்கிறார்கள் என்றும் புகைப் பழக்கம், குடிப்பழக்கம் மற்றும் போதைப் பொருள்களுக்கு அடிமையாவதில் மற்ற குழந்தைகளை  விட விழுக்காட்டில் குறைவாகவே உள்ளார்கள் என்றும் ஆய்வுகள் தெரிவிக்கின்றன. 
Allow a little leeway In addition to all its other benefits, "having dinner together is probably the single most important way to promote good health and nutrition," says Dr David Ludwig, an associate professor of paediatrics at Harvard Medical School and author of Ending the Food Fight.
தொலைக்காட்சிப் பெட்டி முன்னால் பரிமாறினாலும் அன்புடன் பரிமாறப்பட்டால் குடும்பத்துடன் சாப்பிடும் குழந்தைகள் நல்ல 
ஆரோக்கியமாக  இருக்கிறார்கள் என்பது வியப்பான உண்மை. Dr. Ludwig கூற்றுப்படி என்ன சாப்பிடுகிறோம் என்பதைவிட 
எவ்வளவு அதிக நேரம் கும்பத்துடன் சாப்பிட எடுத்துக்கொள்கிறோம் என்பதுதான் முக்கியம். இரவுதான் சேர்ந்து உணவருந்தவேண்டும் என்பதில்லை காலையில் கூட அல்லது வார இறுதியில் கூட இதனைப் பின்பற்றலாம். இதனை ஒரு வழக்கமாக உருவாக்கித்  தவறாமல் பின்பற்றவேண்டும். இப்படிச் செய்வதனால் குழந்தைகளும் அவர்களுடைய அன்றாட நிகழ்வுகளை நம்முடன் பகிர்ந்துகொள்வார்கள். முயற்சிசெய்துதான் பார்க்கலாமே.